வந்தோரை வரவேற்கும் பண்பாளன் தமிழன்Friday, February 19, 2010
ஒன்று பட்டால்
வந்தோரை வரவேற்கும் பண்பாளன் தமிழன்Thursday, February 18, 2010
நரகத்தின் கதை (உண்மைக்கதை)

Wednesday, February 17, 2010
நெறி கெட்ட வெற்றி

Sunday, February 14, 2010
அப்பா நான் சாவேனா....

என் நாட்குறிப்பின் ஒருபக்கத்தை மட்டும் இன்று திறக்கின்றேன்,உங்களுக்காக இது கற்பனை அல்ல என் உயிரில் கலந்த உண்மைகள்.இவை தொடரும்....
அது கடலலை தாலட்டும் மாத்தளன் கடலோரம், லட்சக்கணக்கான மக்களுடன் அன்ரன் அண்ணனின் குடும்பமும் சிறிய படங்குக்குள் முடங்கிக்கிடந்தது.மூத்த பெண்பிள்ளைகள் தவிர ஆசையான கடைசி ஒரே மகன் வயது பத்திருக்கும்.குடும்பமே அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.சாதாரண நாட்க்களில் கூட பள்ளிக்கூடம் விட்டதும் மகனை சயிக்கிளில் ஏற்றியே திரிவார், அவ்வளவு கவனம்.
இப் பெண்பிள்ளைகளை எல்லாம் கரைசேற்க்கும் தோணியும் இவனே.
அவன் சிறுவன்தான், அவன் மனமோ அகன்றவானம், தன் தந்தை குடும்பத்தைக் காப்பாற்றப்படும்பாட்டை உணர்ந்து தனக்குள்ளேயே ஒரு கற்பனையை வளர்த்ததுடன் சகோதரிகளைசுற்றி இருத்தி, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வான்.
வெறும் மணல் தரை, எல்லோரைப் போலவே இவர்களும் பூனை மண்ணைக்கிளறுவதைப்போல் மண்ணைக் கிளறி, அதன் மேல் படங்கைக் கட்டி, அதனுள் படுத்துக் கிடந்து உயிர்காக்கத் துடித்தனர்.ஆனால் அதனுள் குண்டு வீழ்ந்து துடிதுடித்து மடிந்தவர் கதைகளே அதிகம்.இப்படித்தான் இவர்களின் குடும்பமும் நாட்களைக் களித்தது.என்னதான் நடந்தாலும் குடிநீருக்கும் குளிப்பதற்கும் மலசலத்துக்கும் இதர அவசிய தேவைகட்கும், வெளியில் வந்துவிட்டு ஒடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில்தான் ஆயிரம் எண்ண்ம் சுமந்த அந்தச்சிறுபிஞ்சு, வெளிவந்து மீண்டும் வளைக்குள் போகுமுன்னர்,தூரத்து வேட்டொலிகள் அவனருகாக சீறிப்பாய்து போனது.
Saturday, February 13, 2010
புதிதாய் முளைக்கிறார் புத்தர்

Friday, February 12, 2010
அன்பே நிரந்தரம்

பிரிவே நீ விலகாயோ
மனித வாழ்வதே நீர்க்குமிழி போன்றதே
எங்கோ எதிலோ வாழ்வது முடிந்து போகுமே
தனக்கென வாழாமல் பிறக்கென வாழ்வோரை
எந்நாளும் நெஞ்சத்தில் இருத்திவைப்போம்
பல்லாண்டு போனாலும் சரீரம் வெந்தாலும்
அழியாமல் உள்ளத்தில் வாழவைப்போம்
பொதுவாழ்வு என்பது ந்ம் உள்ளத்தில் மலர்வது
துளியாகி விழுந்தாலும் மழையே மண்ணில்
உயிர்தனைக்காக்கவில்லையா??..........
உள்ளத்தில் ஒன்றாகி உருவத்தில் வேறாகி
பொய்யான மாயைக்குள் வீழ்ந்திருப்பார்
நில்லாத பொருளாலே பொல்லாத பகைதேடி
தீராத துன்பத்தில் தோய்ந்திருப்பார்
அன்பொன்றே வாழ்வில் நிரந்தரமானதே
கரைதேடி தவழ்ந்தாலும் அலைகள் என்றும்
கடல்தனைப்பிரிவதில்லையே
எண்ணங்கள் ஒரு கோடி இதயத்தில் உருவாகி
இறக்கைகள் முழைத்தெங்கோ பறந்திருக்கும்
பெற்றோரைப் பெரியோரை
பணிந்திங்கு வாழ்வோர்க்கு
பொன்னான எதிர்காலம் கூடிவரும்
எண்ணங்கள் வாழ்விலே ஈடேறும் நாள்வரும்
புயலாகி வரும்போது அதுவே விரைவாய்
தென்றலாய் மாறவில்லையா??
Thursday, February 11, 2010
மனிதன் கேட்கிறான்

சோலை மலர்களின் தேன் தேடும் வண்டினமே............
நீ ஓயாது உழைத்திடும் இரகசியம் சொல்லாயோ?
உழைத்திடா மனிதன் உன்னிடம் கேட்கிறான்
மெல்லெனப் பாய்ந்து வளைந்தோடும் நதிப்பெண்ணே..........
நீ நில்லாமல் வளைந்தோடும் இரகசியம் சொல்லாயோ?
சோம்பிக்கிடப்பவன் உன்னிடம் கேட்கிறான்
நீல வானில் அலைந்தோடும் முகிலினமே..........
நீ வழிதனில் தரித்திடா வழி சொல்ல மாட்டாயோ?
எப்போதும் உறங்கும் மானுடன் கேட்கிறான்
கரைதேடித் தவழ்ந்தும் கரைசேரா அலைகளே........
நீ சளைக்காமல் தொடரும் இரகசியம் சொல்லாயோ?
ஊக்கம் கெட்ட உள்ளத்தோன் கேட்கிறான்
தென்றலாய் புயலாய் வீசிடும் காற்றே.........
எந்நாளும் தணியாத உற்சாகம் தாராயோ?
இயலாமை பேசும் இளைஞன் கேட்கின்றான்
காலையில் பிறந்து மாலையில் மரிக்கும் வாசமலரே.........
உன் உள்ளத்தைத்திறந்து ஓர்தரம் காட்டாயோ?
சுயநலவாதி சோதிக்கக் கேட்கிறான்
ஓடையில் வாடி ஒற்றைக்கால் நிற்கும் வெண்கொக்கே.......
காத்திருக்கும் ஓர் சுகத்தை ஒருதரம் சொல்லாயோ?
என் அன்புக்காதலி உன்னிடம் கேட்கிறாள்
அழகான கூட்டின் தூக்கணாங்குருவியே.........
உன் அற்புத அலகின் ஆற்றல் சொல்லாயோ?
முயற்சிக்கா மனிதன் உன்னிடம் கேட்கிறான்
எப்போதும் ஒன்றாய் பயணிக்கும் எறும்பினமே.......
எல்லோரும் ஓரணியாய் வாழும் வழி சொல்லாயோ
ஒற்றுமை நீங்கித்தாழ்ந்தவன் கேட்கின்றான்
இயற்கையில் ஆற்றலைப்புகுத்திய இறைவனே........
முகத்தினைப்பார்த்து அகத்தினை அறியும் ஞானம் தாராயோ?
மனிதனால் நொந்த மனிதன் கேட்கிறான்
Monday, February 8, 2010
என் வன்னேரிக்காதலியே....

வன்னேரிக்குளம் தடவி வயல்வழிவந்தாயோ.....
என் ஆசைக்குமரியின் அழகைப்பார்த்தாயா........
என் அருமைக்காதலியே எழில்கொஞ்சும் நாயகியே....
எங்கே எங்கேயென என் வரவு பார்ப்பாயடி.
ஆயிரம் வலிசுமந்து உன் வழி வந்திருப்பேன்
உன் முகம் பார்த்ததும் எல்லாம் மறந்திருப்பேன்
பக்குவமாய் பருகிய பின் பாதியிலே பிரிந்திருப்பேன்
நீருக்குள் நிழலாடும் பச்சைவனக்கிளைகளே
கிளைகளில் கூடுகின்ற வெண்நாரை பட்சிகளே
ஆரவாரம் ஏதுமில்லா அமைதிப்பிள்ளையாரே
வழியோரம் வளைந்தோடும் வாய்காலே
பயிரகிக்கதிராகி காத்து நிற்கும் வயல்வெளியே
இத்தனை அழகையும் எங்கிருந்து பெற்றாயடி
வயதுக்கு வந்தவளே இயற்கையின் இளையவளே
உன்னைப்போல் உன்னைப்போல் எத்தனை அழகிகளை
கழைத்து உழைத்ததெல்லாம் கண்முன்னே போனதெடி
உற்றம் சுற்றம் உறவெல்லாம் தொலைந்ததடி
உலக மனங்களில் மனிதம் அது இல்லையடி
வயதாகிப்போனாலும் வாலிபம்தான் தேய்ந்தாலும்
தேயாத பிறையாகி தெருவோரம் காத்துநிற்பாய்
நீ கோடை காலத்தின் குளிர்விக்கும் அருவி
பங்குனி நாளொன்றில் உன் மடியில் படுத்திருந்தேன்
வலுவிழந்த மூதாட்டி வறுமையால் மீன்பிடித்தாள்
பொழுதாகிப்போனபின்னும் பறிதனில் மீனில்லை
ஆனாலும் மீனில்லை இரவுக்கோ உணவில்லை
சட்டென தூண்டலிலே சிக்கியது மீன் ஒன்று
மெல்லெனப் பிடித்ததனை புல்லினில் போட்டாள் பார்
வெற்றியால் புன்னகைத்தாள் பழங்கிழவி
ஒருவரின் துடி துடிப்பு மற்றவர்க்கு சிரிப்பென்றாய்
ஓர் நொடியில் ஓர்பாடம் உன்மடியில் நான் கற்றேன்
நிச்சயமாய் ஓர்நாள் உனத்தேடி நான் வருவேன்
எனக்காக காத்திரடி உறவாடப் பார்த்திரடி
வாழ்க்கைப் பயணம்

மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை
நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ?
கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ
அலைகளில் தோன்றிடும் நுரைகளாய்
நுரைகளில் தோன்றிடும் குமிழ்களாய்
முடிந்தவர் வாழ்வினை அறிந்தவர் யாரோ
நடந்ததை எண்ணி நடைப்பிணமாவார்
மாற்றான் செல்வப் பெருக்கினைப் பார்த்தால்
நிலை தடுமாறுவார் நின்மதி கெடுவார்
ஊன மனத்துடன் உலாவியே திரிவார்
ஒருவரை ஒருவர் புரிந்திட மறுத்தார்
புரிதலே வாழ்வின் புதிரென அறிவாய்
காசு வாங்கியோ நமக்கு உதவும்
இறைவன் தந்த புன்னகைப்பூவை
அகத்தின் அழகை இயம்பும் மொழியை
பிஞ்சுக் குழந்தையாய் பிரந்தவரெல்லாம்
பெரிய மனிதராய் வளர்கிறார் காண்பீர்
பள்ளிப் பருவத்தில் பட்டாம் பூச்சியாகி
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தே போனதால்
வாலிபம் தேய்ந்து வயோதிபம்வந்துவிடும்
பூமியை விட்டு புறப்படப் போவதை-நீ
நித்தமும் எண்ணி நிதம் நிதம் நோகிறாய்
வரவில் மகிழ்ந்து செலவில் துடிப்பதேன்
நதியோர மரத்தில் குருத்துக்கள் அரும்பும்
அரும்பும் குருத்துக்கள் இலைகளாய் மாறும்
பழுத்த இலைகள் நதிமேல் விழுமே
வீழ்ந்த இலைகள் மிதந்தே போகும்
இலையின் பாதை யார்தான் அறிவார்
நீயும் இலைதான் நீரின் கதைதான்
நீ இதை உணர்ந்தால் நிம்மதி பெறுவாய்
இரண்டு என்றாலும் ஒன்று

கரைகள் இரண்டானாலும் ஓடும் நதி ஒன்று
சிறகு இரண்டானாலும் பறப்பு என்பது ஒன்று
குயில்கள் வேறு ஆனாலும் கூவும் ஓசை ஒன்று
உண்மை பொய் இரண்டானாலும் பேசும் வார்த்தை ஒன்று
இன்பம் துன்பம் இரண்டானாலும் ஏற்கும் இதயம் ஒன்று
வளர்தல் தேய்தல் இரண்டானாலும் பிறை என்பது ஒன்று
ஆறு கேணி வேறானாலும் நீர் என்பது ஒன்று
கள்ளும் பாலும் வேறானாலும் வெண்மை என்பது ஒன்று
களவும் பொய்யும் வேறானாலும் சேரும் பாவம் ஒன்று
பூவும் காற்றும் வேறானாலும் மலர்தல் என்பது ஒன்று
தென்றல் புயல் வேறானாலும் காற்று என்பது ஒன்று
செடிகள் இரண்டு ஆனாலும் பூவின் மணம் ஒன்று
பக்கம் இரண்டு கொண்டாலும் இலை என்பது ஒன்று
விழுதுகள் பற்பல என்றாலும் ஆல் என்பது ஒன்று
எறும்பு யானை என்றாலும் உள்ளே உயிர் ஒன்று
ஏழை செல்வர் ஆனாலும் வாழ்வின் முடிவது ஒன்று
ஆண்டி அரசன் என்றாலும் சேரும் காடு ஒன்று
எல்லாம் இங்கே ஒன்றேயானால் உனக்குள் பிரிவு ஏனடா?
நீதி என்பது ஒன்றென்போம்நியாயம் என்பது ஒன்றென்போம்
சாதியென்பது ஒன்றென்போம்சமயம் என்பதும் ஒன்றென்போம்
வெற்றியை மனதினுள் வைத்திடுதோல்வியை படிகளாய் மாற்றிடு
அதர்மத்தை அடியோடு அழித்திடுதர்மத்தை காத்திட உழைத்திடு
அன்பெனும் தெய்வத்தை இருத்திடு
உன்மேல் நம்பிக்கை வைத்திரு
நல்லதை நாளும் நினைத்திடு
நினைத்ததை முடித்திடவிழித்திடு
இயற்கையை என்றும் மதித்திடு
தெய்வமே உனைத்தேடும் காத்திரு
கடவுளுக்கோர் கடிதம்

என்னவளே..............

காயமே அது பொய்யாம் -வெறும்காற்றடித்த பைய்யாம் மனிதக்கிழவனின் மாயக்கதைகளைஎன்மனம் ஒன்றும் ஏற்பதாய் இல்லைஎன் இணக்குருவி கூடு திரும்புவாள் தன் அன்புக்குஞ்சை தாவிஅணைப்பாள்
நித்தமும் உன்னுடன் நினைவில் வாழ்கிறேன் பித்தனாய் என்று புரண்டு அழுகிறேன் நெஞ்சோடு உறவாடி நிழலாடுகின்றாய் உன் வழி பார்த்து காத்து நிற்கின்றேன் நீலக்கடல் ஓரத்திலே நீளும் தரைவெளிகளிலே என் மனம் உன்னைத்தேடுதே
தேசமே..........

பள்ளிப்பாடங்கள் பக்குவமாய் கற்றிடுவோம்

